என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Things to Watch Out For"
- மிதமான ஷாம்புவையே பயன்படுத்துவது சிறந்தது.
- சிறிதளவாவது எண்ணெய் வைத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்.
குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. சாதாரணமாக தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்துக்கொண்டு வந்து விட்டால் மட்டும் போதாது. குளிப்பதிலும் குளித்த பின்னர் துடைப்பதிலும் சில முறைகளை பின்பற்ற வேண்டும்.
* குளிக்க செல்லும்போது காய்ந்த தலை முடியில் குளிக்க கூடாது. சிறிதளவாவது எண்ணெய் வைத்துக்கொண்டு குளிக்க செல்ல வேண்டும்.
* மிதமான ஷாம்புவையே பயன்படுத்துவது சிறந்தது. குறிப்பாக ஷாம்புவை அப்படியே தலையில் தேய்த்து குளிக்க கூடாது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஷாம்புவை ஊற்றி கலக்கிய பின்னர் தலைமுடியில் தேய்த்து குளிக்க வேண்டும்.
* முதலில் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசி விட்டு கடைசியாக குளிர்ந்த நீர் ஊற்றி கழுவிக்கொள்வது நல்லது.
* தலையை கழுவும் போது முடியை கீழ்நோக்கி வைத்துக்கொண்டு கழுவ வேண்டும். நேராக நின்றுகொண்டு ஷவரில் தலையை கழுவினால் முடியின் வேர்கள் பலமற்றதாகிவிடும்.
* ஈரமான முடியை தலையில் உச்சியில் வருமாறு துண்டை கட்டிக்கொள்ள வேண்டும். பின்னால் கொண்டையாக முடியை சுற்றக்கூடாது.
* ஈர முடியை 15 நிமிடங்களில் உலர்த்திக்கொள்ள வேண்டும். ஒருமணிநேரத்திற்கு ஈரமாக முடிந்துகொண்டு வேலை செய்வது தலையில் நீர்கோர்த்துக்கொள்ளும்.
* ஈர முடியை துண்டால் அடித்து துவட்டாமல் கை விரல்களால் பிரித்து சிக்கெடுத்து உலர்த்த வேண்டும்.
* உலர்ந்த முடியை விரித்து போட்டபடி இருப்பது முடியை கரடுமுரடாக மாற்றிவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்