என் மலர்
நீங்கள் தேடியது "submit work"
- 12 ஆண்டுக்கு பிறகு முழு பட்ஜெட்டை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
- சட்டசபை கூட்டத்தொடரில் அரசின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் 12 ஆண்டுக்கு பிறகு முழு பட்ஜெட்டை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். சட்டசபை கூட்டத்தொடரில் அரசின் முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லை என எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான வேலை திட்டத்தை வரும் 30-ந் தேதிக்குள் துறை செயலர்களிடம் சமர்பிக்க அனைத்து அரசு துறை தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து துறை தலைவர்களும் 2023-24-ம் நிதியாண்டில் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை இரு இணைப்புகளில் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் துறையில் நடத்தப்படும் மாநாடுகள், இலக்குகள் மேம்பாடு செயல் பாடுகள், பணிகள் என அனைத்தும் இருக்கவேண்டும். புதிய திட்டங்கள்,புதிய முயற்சிகள், திட்டங்களை மக்களிடம் சென்றடைய சிறந்த நடைமுறைகள், திட்ட செயல்பாட்டில் புதுமைகளையும் சேர்க்க வேண்டும். திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் நிறைவேற்றப்படும் பணிகள், செலவுகள் குறித்தும் திட்டமிட்டு தனித்தனியே காட்ட வேண்டும்.
வேலை திட்டத்தை இறுதி செய்ய தனி கூட்டம் நடத்தப்படும். இதுகுறித்து அதிகாரிகளின் திறன் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இருக்கும். அனைத்து துறை தலைவர்களும் நடப்பு நிதியாண்டு வேலை திட்டத்தை பூர்த்தி செய்து துறை செயலர்களிடம் வரும் 30-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






