என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storekeeper"

    • வருகிற ஆகஸ்ட் 27-ந் தேதி போட்டித்தேர்வு ந டைபெறும் என பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • சரியான பதிலுக்கு ஒரு மதிப்பெண், தவறான பதிலுக்கு 0.25 மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 165எல்.டி.சி, 55 ஸ்டோர் கீப்பர் கிரேடு 3 பணியிடங்களுக்கு கடந்த நவம்பரில் ஆன்லைனில் விண்ண ப்பங்கள் பெறப்பட்டது.

    மொத்தம் 47 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். எல்.டி.சி, ஸ்டோர்கீப்பர் பணியிடங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 27-ந் தேதி போட்டித்தேர்வு ந டைபெறும் என பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தேர்வுக்காக தேர்வு மையங்கள் இறுதி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இரு பணியிடங்களுக்கும் பிளஸ்-2 தேர்ச்சியே தகுதியாக உள்ளது.

    எனவே 2 பணிகளுக்கும் ஒரே முறையில் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    போட்டி தேர்வை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் எழுதலாம். 100 மதிப்பெண்களுக்கு 2 மணிநேரம் தேர்வு நடைபெறும். சரியான பதிலுக்கு ஒரு மதிப்பெண், தவறான பதிலுக்கு 0.25 மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.

    சமீபத்தில் யூ.டி.சி தேர்வில் தேர்ச்சி பெறாமல் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர்களுக்கு அடுத்தபடியாக எல்.டி.சி. தேர்வை உடனடியாக அறிவித்துள்ளது நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை இளைஞர்கள் எல்.டி.சி, ஸ்டோர்கீப்பர் பணி தேர்வுக்கு உற்சாகமாக படிக்க தொடங்கியுள்ளனர்.

    ×