என் மலர்
நீங்கள் தேடியது "South African Parliament Elections"
- எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
- பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களே நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் 400 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 29-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. கடந்த 2 நாட்களாக வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இன்று காலை முடிவுகள் வெளியாகின.
இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை இழந்துள்ளது. பதிவான வாக்குகளில் 99.8 சதவீதம் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஜனநாயகக் கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவின் புதிய கட்சி 15 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி 9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு வெள்ளை நிறவெறியிலிருந்து விடுதலை பெற்று தந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 1994-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பெரும்பான்மையை இழந்துள்ளது. முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நிறுவிய அக்கட்சி மற்ற சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சியையும் ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முடிவு குறித்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத் தலைவர் டுமிசோ கூறும் போது, தேர்தல் முடிவு ஒரு கற்றல் புள்ளியாக நாங்கள் பார்க்கிறோம். எங்களை ஊக்குவிக்கும் ஒரு பாடம் என்றார்.
பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களே நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






