என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச யோகா"
- அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்து 208 பேர், இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
- யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், 30-வது சர்வதேச யோகா திருவிழா புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுக வளாகத்தில் நடந்து வருகிறது.
விழாவையொட்டி நடந்த யோகா போட்டிகளில் புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்து 208 பேர், இருபாலர் பிரிவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
தொடர்ந்து யோகா நித்ரா பயிற்சி, போட்டிகள், பயிலரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை புதுவை கடற்கரை சாலையில் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தைகளுக்கான யோகா, இறுதி போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் யோகா திருவிழா மாலை நிறைவு பெறுகிறது.






