என் மலர்
நீங்கள் தேடியது "பாசிட்டிவ் மந்திரங்கள்"
- எப்போதும் உற்சாகமாக வேலையை செய்யுங்கள்.
- உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள்.
நல்லதையே நினைப்போம்... நல்லதையே செய்வோம்... நல்லதே நடக்கும்... என பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள். ஒருவரின் எண்ணத்தை பொறுத்து தான் அவரது வாழ்க்கை அமையும்.
நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில் உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணம். எந்தவொரு விஷயத்தையும் நேர்மறை எண்ணத்தோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகிப்பாருங்கள். உங்களை வெற்றி தேவதை தொற்றிக்கொள்ளும்.
1. பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
2. உற்சாகமாக இருங்கள்
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகமாக வேலையை செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
3. மதிப்புமிக்கவராக உணருங்கள்
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களைப்போல இந்த உலகத்தில் `பவர்புல்லான'வர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நிச்சயம் சாதிப்பீர்கள்.
4. உங்களை நேசியுங்கள்
உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள்.
உங்களை நீங்களே வெறுக்காதீர்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் வெகுண்டெழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு உணர்த்துங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
5. பயணப்படுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது. இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும். அடுத்த ஐந்தாண்டுக்குள் உங்களுடைய ஆசைகள் நிறைவேறி இருக்கும்.






