என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி உத்தரவு"

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலையில் கைதான 6 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் பிரமுகர் காலாப்பட்டு ஜோசப் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் செல்வகுமார், மற்றும் பார்த்திபன் மோகன், ஆனந்த், குமரேசன் ஆகியோர் கொலை நடந்த மறுநாளே கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இதை விசாரித்த நீதிபதி 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    அவர்கள் தினமும் விழுப்புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    ×