என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivandiars"

    • திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு கோடி முறை பஞ்சாட்சர மந்திர பாராயணம் நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது.
    • விழாவில் பஞ்சாட்சர மந்திரம் கூறிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒரு கோடி முறை பஞ்சாட்சர மந்திர பாராயணம் நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அதன் நிறை வு விழா கோவிலில் நடந்தது. விழாவில் பஞ்சாட்சர மந்திரம் கூறிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி சீதாராமன், செ யல் அதிகாரி சதீஷ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சக்தி முருகன், மோகன், நடராஜன் மணிமாறன், பன்னீர்செ ல்வம் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.

    ×