என் மலர்
நீங்கள் தேடியது "Sendak"
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணைய தளத்தில் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து இந்த கல்வி ஆண்டில் நர்சிங் படிப்பில் சேர இந்த கல்வி ஆண்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய நர்சிங் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
அதனை ஏற்று இந்திய நர்சிங் கவுன்சில் இந்த கல்வி ஆண்டில் நர்சிங் படிப்பில் சேர புதுவைக்கு விலக்கு அளித்துள்ளது. இதனை மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் பாராட்டி வர வேற்கிறது. இதற்கிடையே புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவி ப்பாணை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது. எனவே சென்டாக் நிர்வாகம் மருத்துவம் சார்ந்த நீட் படிப்பிற்கு அனைத்து உரிய அனுமதிகளையும் பெற்று கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பெற சுகாதாரத்துறையும் சென்டாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் குறுக்கு வழியில் வெளி மாணவர்கள் சேராத வண்ணம் அவர்களின் சான்றிதழ்களை மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.
அதோடு மருத்துவப்ப டிப்பிற்கான கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணைய தளத்தில் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






