search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed Balls"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    வேலூர்:

    வேலூரை அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள தீர்த்தகிரி மலைபகுதியில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணியினை இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதில் புங்கன், தூங்குவாகை, ஆலம், அரசம், சரக்கொன்றை, மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மர விதைகளை மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலைப்ப குதியில் ஆங்காங்கே தூவினர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஒரு ஒன்றிய குழு தலைவர், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத ெபருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி ஒருமணி ேநரத்தில் 75 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.
    • ஊரகப்பகுதியில் பல்லுயிரியல் பெருக்கம், பசுமையான சூழலை பேணி வளர்த்தல் குறித்து விளக்கி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். குழுவினர் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத ெபருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28-ந் தேதி ஒருமணி ேநரத்தில் 75 ஆயிரம் விதைபந்துகள் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

    இந்த சாதனை 'வெர்ச்சூ' புத்தகத்தில் இடம் பிடித்தது. இதன் ெதாடர்ச்சியாக புதுவை காலாப்பட்டு கீழ்புத்துப்பட்டு வனப்பகுதி, ஏரிக்கரை, தோப்புகள் தரிசு நிலங்களில்

    என்.எஸ்.எஸ். குழுவினர் உருவாக்கிய விதைபந்துகள் தூவப்பட்டன. இதில் சி்றப்பு விருந்தினராக தென்னிந்திய யுனிவர்சல் எக்கோ பவுண்டசேன் நிறுவன இயக்குனர் பூபேஷ் குப்தா கலந்து கொண்டு மாணவர்களின் சுற்றுச்

    சூழல் ஆர்வத்தை பாராட்டினார். ேமலும் அவர், ஊரகப்பகுதியில் பல்லுயிரியல் பெருக்கம், பசுமையான சூழலை பேணி வளர்த்தல் குறித்து விளக்கி பேசினார்.

    முன்னதாக பள்ளியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் டேவிட் செயிண்ட் ஆண்டனி வரவேற்றார். முடிவில் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

    ×