என் மலர்
நீங்கள் தேடியது "Sankara Vidyashram School"
- சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கீதா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நீர்குடத்தை வரவேற்று கொண்டாடினர்.
புதுச்சேரி:
புதுவை ஒதியம்பட்டில் அமைந்துள்ள சங்கர வித்யாஸ்ரம் மேல் நிலைப்பள்ளியில் தண்ணீர் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்கரஹாரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து நீர்குடம் சுமந்து சங்கர வித்யாஸ்ரம் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கீதா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நீர்குடத்தை வரவேற்று கொண்டாடினர்.
நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை சவுந்தரி தொகுத்து வழங்கினார். புதுவை அரபிந்தோ சொசைட்டியின் மருத்துவ மற்றும் மனநல பணியாளர் அருண்பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முடிவில் தண்ணீர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள்உறுதிமொழி ஏற்றனர்.






