என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbed of jewelry"

    • வெங்கட்டா நகரில் நடந்து சென்ற ஓட்டல் அதிபர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்தும், முக கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டா நகரில் நடந்து சென்ற ஓட்டல் அதிபர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

    புதுவை காமராஜர் நகர் சன்னதி தெருவை சேர்ந்தவர் டெல்லி குமார். இவர் 45 அடி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி அம்பிகா(வயது50). அம்பிகா ஓட்டலை மேற்பார்வையிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வெங்கட்டாநகர் திருவேங்கடம் வீதியில் நடந்து வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்தும், முக கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட அம்பிகா செயினை கையால் இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.

    ஆனாலும், அந்த மர்மநபர்கள் கையில் கிடைத்த பாதி தங்க செயினுடன் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து டெல்லி குமார் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுவையில் சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் நகையை பறித்து செல்கின்றனர். முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்த ஜிப்மர் பெண் ஊழியரிடம் பட்டப்பகலில் மர்மநபர்கள் செயினை பறித்து சென்றனர். தொடரும் இந்த சம்பவங்களால் பெண்கள் தனியாகவே நடந்து செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

    ×