என் மலர்
நீங்கள் தேடியது "Puduvai students"
- தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் புதுவையில் நடைபெற்றது.
- மாணவர்களுக்கு பாராட்டு விழா முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகள் புதுவையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் புதுவை ஜீ-டோக்கு காய் கராத்தே பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வே று பரிசுகளை பெற்று சாதனை படைத்தனர். மாணவர்களுக்கு பாராட்டு விழா முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. விழாவில்பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் பாரத் கராத்தே அமைப்பின் புதுவை தலைவர் அழகப்பன்,
ஜீ-டோக்கு காய் கராத்தே பயிற்சி பள்ளியின் மூத்த பயிற்சியாளர்கள் குமரன், ராமராஜா, வினிதா, சமிதாகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






