என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "public watched"
- புதுச்சேரி கலை விழா திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.
- மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எம்.ஏ.வுமான நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
புதுவை அரசு கலை பண்பாட்டு துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் புதுச்சேரி கலை விழா திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.
விழாவை உள்துறை அமைச்சரும், மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எம்.ஏ.வுமான நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முதல் நாள் மங்கல இசையும் அதனை தொடர்ந்து லயம் நாட்டியாலயாவின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் மேற்கு வங்காளம் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
நேற்று 2-ம் நாள் தெலுங்கானா மாநில நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், தமிழக கரகம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து ரசித்தனர்.
அரியானா மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலை பண்பாட்டுத்துறை ஊழியர்கள் மாறன், முருகையன், முருகானந்தம், சுப்ரமணியன் மற்றும் அவுட் சோர்சிங் ஊழியர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்