என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pimms Hospital"

    • மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி பேசும் போது தொற்றா நோய்கள் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது.
    • புதுச்சேரியில் தொற்றா நோய் குறித்த திறன் மேம்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்றார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் எக்கோ இந்தியா அமைப்பு சார்பில் பெருகி வரும் தொற்றா நோய் குறித்து விவாதிக்க வட்ட மேசை மருத்துவ மாநாடு கல்லுாரி அரங்கில் நடந்தது.

    பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். பிம்ஸ் மருத்துவமனை முன்னாள் சமுதாய மருத்துவ பேராசிரியர் ஜில்லே சிங் கலந்து கொண்டு மாநாட்டின் கையேட்டை வெளியிட்டார்.

    மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி பேசும் போது தொற்றா நோய்கள் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது.

    ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மற்றும் அறிவு பகிர்வு ஆகியவையால் மட்டுமே நோயை தடுக்க முடியும்.

    எக்கோ இந்தியாவுடான இந்தஒத்துழைப்பு மற்றும் முன்னெடுப்பு புதுச்சேரியில் தொற்றா நோய் குறித்த திறன் மேம்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்றார்.

    மாநாட்டில், எக்கோ இந்தியாவின் துணை தலைவர் டாக்டர் சந்தீப் பல்லா, பிம்ஸ் மருத்துவமனை துணை முதல்வர் ஸ்டாலின், மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், பிரபல மருத்துவ நிபுணர்கள் டாக்டர் தாஸ், சி.எம்.சி., மருத்துவமனை பேராசிரியர் சாமுவேல், டாக்டர் ஜெரால்ட் மற்றும் டாக்டர் விஜய் பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த முன்னணி மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமித்தா தாஸ் நன்றி கூறினார்.

    • மருத்துவ நிபுணர் அலெக்ஸ் சக்காரியா பங்கேற்பு
    • ஒரு மூச்சு எண்ணிக்கை கணக் கீடு மூலம் மன இறுக்கம் குறைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ மனையில், மன அழுத்தத்தை குறைப்பது தொடர் பான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. சமுதாய மருத்துவ துறை மற்றும் மருத்துவ கல்வி பிரிவு இணைந்து நடத்திய இக்கருத்தரங் கிற்கு சமுதாய மருத்துவ துறை தலைவர் ராஜேஷ் வரவேற்றார்.

    பிரபல பொது மருத் துவ நிபுணரான அலெக்ஸ் சக்காரியா, மன அழுத் தம் தொடர்பான செயலியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    மன அழுத்தத்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் 'ரெமர்சய்ஸ்' செயலியில் குறிப்பிட்ட பயிற்சிகள் மூலம் நம்மால் குறைக்க முடியும்.

    கனி வான பேச்சு, சீரான உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சின்ன சின்ன பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

    மேலும் அதற்குரிய செயலி நமக்கு நினைவூட்டும். மருத்துவ மற்றும் செவிலிய மாணவ-மாணவிகள் பல குழுக்களாக இணைந்து ஒரு மூச்சு எண்ணிக்கை கணக் கீடு மூலம் மன இறுக்கம் குறைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், மருத்துவ மாணவர்களுடன் கலந்து ரையாடினார். அவருக்கு, பொது மருத்துவ நிபுணர் சுவாமிநாதன், மகப்பேறு மருத்துவர் பத்மா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

    நிகழ்ச்சியை பேராசிரியர் ஜாய் தொகுத்து வழங்கினார்.

    ×