என் மலர்
நீங்கள் தேடியது "Order for Youth"
- வேலை வாய்ப்பு விழா வாயிலாக 10 லட்சம் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு இயக்கத்தை இன்று காலை காணொளி கூட்டம் மூலம் டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வேலை வாய்ப்பு விழா வாயிலாக 10 லட்சம் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு இயக்கத்தை இன்று காலை காணொளி கூட்டம் மூலம் டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி புதிதாக நியமனம் கடிதம் பெற்றவர்களுடன் காணொளி மூலம் பேசினார்.
இதன் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதப்படை, உதவி ஆய்வாளர், கான்ஸ்டபிள், ஸ்டெனோ கிராபர், அஞ்சலக எழுத்தர், வருமான வரி ஆய்வாளர்கள், பண்முகத் திறன் ஊழியர்கள் உள்ளிட்ட 38 அமைச்சகங்கள், துறைகளில் உள்ள குரூப் -ஏ. குரூப்-பி மற்றும் குரூப்- சி பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஊழியர்கள், பணியமர்த்த ப்பட உள்ளனர்.
புதுவை கம்பன்கலை யரங்கத்தில் பிரதமர் மோடியின் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. விழாவிற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர், பகவத் கிஷன்ராவ் கரட் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை புதுவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மறௌறும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த 57 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணகுமார், செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






