search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online system"

    • 10 ஆண்டு பணி முடிந்தவர்களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
    • மேம்பாட்டுக்கழகம் மூலம் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆதிதிராவிடர் நற்பணி இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர் உரிமை சங்கம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கோரிக்கைகறை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் மாயவன் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நற்பணி இயக்க செயலாளர் வீரசெல்வம் முன்னிலை வகித்தார்.

    தீண்டாமை ஒழிப்பு முன்னணி கொளஞ்சியப்பன், சரவணன், உமாசாந்தி, விவசாய தொழிலாளர் சங்கம் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். பாகூர்பேட் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். நலத்துறையில் 17 ஆண்டாக பணிபுரியும் 67 தினக்கூலி சமையல் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டு பணி முடிந்தவர்களை நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

     நலத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், பெண்களை இடமாற்றம் செய்யக்கூடாது.

    இலவச கல்விக்கான முழு கட்டணத்தையும் பள்ளி, கல்லூரி தொடங்கிய 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும். கல்வி உதவி த்தொகை பெற ஆன்லைன் முறையை கைவிட வேண்டும். மேம்பாட்டுக்கழகம் மூலம் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும்.

    காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நிர்வாக காரணங்களுக்காக திடீரென மாணவர் ஆன்லைன் கவுன்சிலிங்கை ரத்து செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

    இந்த ஆண்டு மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் சென்டாக் மூலம் ஒரே விண்ணப்பத்தின் கீழ் மாணவர் சேர்க்கை முறை அமல்படுத்தப்பட்டது.

    இதற்காக ஆன்லைனில் விண்ணப்பம், கட்டணம் பெறப்பட்டது. அனைத்து படிப்புகளும் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது.

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கு முதல் 2 கட்டமாக ஆன்லைன் கவுன்சிலிங் நடந்து மாப்அப் கவுன்சிலிங்கும் முடிந்துள்ளது.

    இந்நிலையில் சென்டாக் நிர்வாகம் திடீரென ஆன்லைன் கவுன்சிலிங்கை ரத்து செய்துள்ளது. மீண்டும் சென்டாக்கில் நேரடி கவுன்சிலிங்கிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி பி.டி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை, பி.டெக். உள்ளிட்ட படிப்புகளுக்கு பிள்ளைச்சாவடியில் உள்ள அரச என்ஜினீயரிங் கல்லூரியில் நேரடி கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) பி.டி.எஸ்., ஆயுர்வேதம் படிப்புகளுக்கும், 30-ந்தேதி பி.டெக். சுயநிதி, பி.எஸ்.சி. வேளாண் மற்றும் தோட்டக்கலை, 31-ந்தேதி உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கும், 2, 3-ந்தேதிகளில் பிடெக், 4-ந்தேதி பி.பார்ம்., பி.ஏ., எல்.எல்.பி. படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிர்வாக காரணங்களுக்காக ஆன்லைன் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×