என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Training"

    • புதுவை பிம்ஸ் மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் தேசிய 4-வது பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • பூஞ்சை தொற்று குறித்தும், அதனை மருத்துவ ரீதியாக நிபுணர்கள் கையாளுதலின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை பிம்ஸ் மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பில் தேசிய 4-வது பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    கல்லூரி அரங்கில் நடைபெற்ற பயிற்சி பட்டறைக்கு, பிம்ஸ் மருத்துவ நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி, கருத்தரங்க கையேட்டை வெளியிட்டு, பூஞ்சை தொற்று குறித்தும், அதனை மருத்துவ ரீதியாக நிபுணர்கள் கையாளுதலின் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

    பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் சசிகலா வரவேற்றார்.

    தேசிய பயிற்சி பட்டறையில் புதிய தொழில் நுட்பத்தோடு பூஞ்சை தொற்று நோய் பி.சி.ஆர் மற்றும் ரேபிட் முறையில் கண்டறிதல், புதிய வகை தொற்று கண்டறிதல், அது குறித்த சோதனை முறை பற்றி பங்கேற்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.

    இதில், பிம்ஸ் மருத்துவமனை முன்னாள் நுண்ணுயிரியல் துறை தலைவர் ரெபா, சண்டிகர் முதுநிலை கல்வி நிலையை டாக்டர் சிவபிரகாஷ், டாக்டர் அனுபமா உள்பட பல மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் டாக்டர் ஷீலாதேவி நன்றி கூறினார்.

    ×