search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanasamy request"

    • ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற நளினி உட்பட 6 பேர் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மன வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படு த்தியுள்ளது.
    • காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக எதிர்க்கின்றோம்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற நளினி உட்பட 6 பேர் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மன வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படு த்தியுள்ளது.

    மத்திய அரசு அந்த 6 பேருடைய விடுதலை சம்பந்தமான மனுவில் தங்களுடைய தீவிரமான எதிர்ப்பை காட்ட தவறிவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக சுப்ரீம்கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இந்த விடுதலையை கொண்டாடுகின்றனர். அது மேலும் வேதனையை உருவாக்குகிறது.

    மற்ற அரசியல் கட்சியினுடைய தலைவர் படுகொலை செய்யப்பட்டால் அந்த கட்சியினர் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? சில அரசியல் கட்சிகள் அடிக்கடி தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்கின்ற போக்கு பெரும் வேதனை தருகிறது.

    காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக எதிர்க்கின்றோம். தலைவரை இழந்து வாடும் காங்கிரஸ் தொண்டர்க ளுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தொண்டன் என்ற முறையிலே தலைவர் ராஜீவ் காந்தி படுகொலையை கண்டித்து முழுமையான நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்.

    இவ்வாறு நாராயணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×