search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naga shaurya"

    • தெலுங்கு நடிகர் நாக சவுர்யா ’பலனா அப்பாயி பலனா அம்மாயி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
    • காதலியை அடித்த காதலனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு நடிகர் நாக சவுர்யா வலியுறுத்தியுள்ளார்.

    இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்தவர் நாக சவுர்யா. இவர் 'பலனா அப்பாயி பலனா அம்மாயி' என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஹைதராபாத்தின் பிசியான சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை அடித்து உள்ளார். இதை பார்த்த நாக சவுர்யா தடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறினார்.


    ஆனால் அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்தார். காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்றார். மேலும் அந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார் நாக சவுர்யா. இதை பார்த்த அந்த பெண் தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    யார் யாரை அடித்தால் நமக்கென்னவென்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா நிஜ ஹீரோ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேடி தான் நாக சவுர்யா இப்படி செய்திருக்கிறாரோ என்றும் சிலர் பேசுகிறார்கள். நாக சவுர்யாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி திருமணம் நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான அனுஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் நாக சவுரியா. இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோடு மஞ்சுரேவுலாவில் உள்ள நாகசவுரியாவின் பண்ணை வீட்டில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. 

    இதையடுத்து அந்த பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 24 பேருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த நாக சவுரியாவின் நெருங்கிய நண்பர் சுமந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.24 லட்சம் ரொக்கம், ஸ்வைப்பிங் மெஷின், சீட்டு கட்டுகள், கார்கள், மொபைல் போன்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். 

    நாக சவுரியா

    இந்த பண்ணை வீட்டை நாக சவுரியா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இருந்து 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சூதாட்டத்தில் நாக சவுரியாவுக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×