search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycles recovered"

    • புதுவை தமிழக எல்லையான ஆரோவில், பட்டானூர், பூத்துறை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, வழிப்பறிக் கொள்ளையர்கள் நட மாட்டத்தை கண்காணிக்கும் படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
    • வாகன சோதனையில் 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை ஆரோவில் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழக எல்லையான ஆரோவில், பட்டானூர், பூத்துறை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, வழிப்பறிக் கொள்ளையர்கள் நட மாட்டத்தை கண்காணிக்கும் படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

    அதன்படி ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் தலைமை யிலான போலீசார் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த வாகன சோதனையில் 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை ஆரோவில் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் தலை மறைவான நிலையில் அவர்களை பிடிக்கவும் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் யாருடையது? எங்கு திருடப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×