என் மலர்
நீங்கள் தேடியது "Minister Bee.Jayakumar"
- புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- 223 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்து 170 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு வேளாண்துறை மூலமாக ஒருங்கிணந்த தோட்டக்கலை மேம்பாடு திட்டம் மூலம் வெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு சென்ட்டிற்கு ரூ.ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் 657.33 சென்ட் பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்த 51 விவசாயிகளுக்கு ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 995 வழங்கப்படுகிறது.
மரவள்ளி சாகுபடி செய்த 36 விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 550, தென்னை பராமரிப்பு திட்டத்தின் கீழ் 136 விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.8 ஆயிரத்து 750 வீதம் ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 625 என மொத்தம் 223 தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்து 170 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






