என் மலர்
நீங்கள் தேடியது "Manakula Vinayaka education"
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
- மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குன ருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த வளாக தேர்வில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு தக்க்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவரும் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணக்குள விநாயகர் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார். விழாவில் டி.சி.எஸ். நிறுவனத்தின் அகாடமிக் அலையன்சஸ், அகாடமிக் இன்டர்பேஸ் புரோகிராம் தலைவர் சுசீந்திரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி மாணவர்க ளுக்கு பணி நியமன ஆணை களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜியின் முதல்வர் மலர்க்கண், மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொ ய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை டீன் வேல்முருகன், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலை டு ஹெல்த் சயின்ஸ்டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையின் டீன் முகமது யாசின், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், சட்டக்கல்வித்துறை டீன் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






