என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar Mani Mandapam"

    • சிறுநீரக நோயிற்கான பரிசோதனை மற்றம் ஆலோசனைகள் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
    • னைவருக்கும் ஆரோக்கிய நல்வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறும்.

    புதுச்சேரி:

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சுகாதார திருவிழா 4-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    புதுவை கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் சிவாஜி சிலை அருகில் நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சுகாதாரத் திருவிழா நடக்கிறது. இதில் பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், குழந்தைகளுக்கான ஆலோசனை, இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோயிற்கான பரிசோதனை மற்றம் ஆலோசனைகள் அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    மேலும், சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடல் பயிற்சி முறை, ஆரோக்கிய உணவு திருவிழாவும் நடைபெறுகிறது. அனைவருக்கும் ஆரோக்கிய நல்வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    • நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை மின்துறை, பவர்கிரிட் இந்தியா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.
    • திருவிழா தொடங்கி வருகிறள 30-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை மின்துறை, பவர்கிரிட் இந்தியா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை இணைந்து பாரதத்தின் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது.

    இந்த திருவிழா தொடங்கி வருகிறள 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவை அமைச்சர் நமச்சிவாயம் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அரசு சார்பிலும், பிற அமைப்புகள் சார்பிலும் அமைககப்பட்டுள்ள அரங்கு களை பார்வையிட்டார்.

    அரங்குகளில் 75 ஆண்டுகால மின் வளர்ச்சி, 2047-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்கு, திட்டங்கள், சூரிய ஒளி மின்கலம் அமைக்க வழங்கப்படும் மானியம், இதைப்பெறும் வழிமுறைகள், மின் நுகர்வோர் உரிமைகள், சட்டம் குறித்து ஒலி, காணொலி காட்சிகளும் நடத்தப்படுகிறது.

    30-ந் தேதி நிறைவு விழாவில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். இந்த அரங்குகளை பொதுமக்கள் 30-ந் தேதி வரை காலை 9.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காணலாம்.

    ×