என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Interview with Narayanasamy"

    • ஜனாதிபதி வேட்பாளர்களை ஒப்பிட்டு பார்த்து மனசாட்சியோடு திறமையின் அடிப்படையிலும், தகுதி மற்றும் சுதந்திரமாக செயல்படுபவர்களுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. கள் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகவாதியான யஷ்வந்த் சின்கா தனது அதிகாரத்தை பயன்படுத்துவார்
    • மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி 5 ஆண்டுகளில் படுதோல்வி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி என கூறிய மோடி தற்போது பல வரிகளை விதித்து வருகிறார்

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிரு பர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி வேட்பாளர்களை ஒப்பிட்டு பார்த்து மனசாட்சியோடு திறமையின் அடிப்படையிலும், தகுதி மற்றும் சுதந்திரமாக செயல்படுபவர்களுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. கள் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகவாதியான யஷ்வந்த் சின்கா தனது அதிகாரத்தை பயன்படுத்துவார்.

    மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி 5 ஆண்டுகளில் படுதோல்வி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே வரி என கூறிய மோடி தற்போது பல வரிகளை விதித்து வருகிறார். இதனால் பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி வருகிறது. ஜி.எஸ்.டி யால் லட்சக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 25 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

    காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்டுள்ளது புதுவை நிர்வாகம் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

    தேர்தல் முடிந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு முறை கூட ரங்கசாமி காரைக்கால் செல்லவில்லை. அங்குள்ள பல துறைகளில் செயல்பாடுகளை அவர் கவனிக்கவில்லை. காரைக்கால் மீது முதல்-அமைச்சரும் அமைச்சர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

    ஜி.எஸ்.டி இழப்பீடு கிடைக்வில்லை என்றால் ரங்கசாமி பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்.கொரோனா விழிப்பு ணர்வை சுகாதாரத்துறை ஏற்படுத்தவில்லை. பல அரசியல் காரணங்க ளுக்காக ஏனாம் புறக்கணிக்கப்படுகிறது.

    காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள் என முன்பே நான் கூறியுள்ளேன். இப்போது அதுதான் நடக்கிறது. ஏனாம் மக்கள் தன்னை ஏமாற்றியவர்கள் என நினைக்காமல் ரங்கசாமி அங்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×