search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headmaster's house"

    • காலாப்பட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    • புதுவை பெரிய காலாப்பட்டு பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் பெனிடிக்பிரான்சிஸ் (வயது58).

    புதுச்சேரி:

    காலாப்பட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை பெரிய காலாப்பட்டு பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் பெனிடிக்பிரான்சிஸ் (வயது58). இவரது மனைவி விமலாஜெயசீலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெரம்ப லூரில் வசித்து வருகிறார்.

    பெனிடிக்பிரான்சிஸ் மரக்காணத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலாஜெயசீலி கீழ்புத்துப்பட்டை அடுத்த செய்யாங்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்வத்தன்று இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.7 1/2 லட்சம் ஆகும். மர்மநபர்கள் பலநாள் நோட்டமிட்டு பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பெனிடிக் பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள் மணி ஆகியோர் தலைமை யிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    இந்தநிலையில் பிள்ளைச்சாவடியில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரம் கூனிமேடு குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த சுமன் என்ற ஸ்ரீமன் (27) என்பதும் தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட நகையில் 15 பவுனை புத்துப்பட்டு அய்யனார் கோவில் அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்தார்.மேலும் 10 பவுனை மயிலாடுதுறையில் கடையில் விற்று அந்த பணத்தை செலவு செய்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த 25 பவுன் நகையை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 திருட்டு வழக்குகள் உள்பட 6 வழக்குகள் உள்ளது.

    ×