என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government quota"

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2 இடங்களும் என மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

     இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் என். ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் உள்ள 22 இடங்களில் 9 இடங்கள் நிரப்பப்பட்டு ள்ளது. இதில் காலியாக உள்ள 13 இடங் களை அரசு ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும்.

    2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு இடங்களை பெற்று மாணவர்கள் கல்லூரியில் சேரும் தேதி நேற்றுடன் நிறைவடை ந்துவிட்டது. இதன்பிறகு காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் தெரியவரும்.

    ஏற்கனவே புதுவை அரசு ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள 370 மருத்துவ இடங்களில் தகு தியான மாணவர்கள் இல் லாததால் அரசு மருத்துவ கல்லூரியில் 4 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2 இடங்களும் என மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் இளநிலை மருத்துவ படிப் புக்கான 3-ம் கட்ட மாப்- அப் கலந்தாய்வை வருகிற 20-ந் தேதி நடத்தி மாண வர் சேர்க்கையை முடிக்க வேண்டும். அதற்குமேல் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மருத்துவ கலந் தாய்வு கமிட்டி அனுமதிக் காதது. எனவே, புதுவை அரசு, சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் நிர்வாகம் ஒன்றி ணைந்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தா ய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×