என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gopooja"

    • ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் சார்பில் மீண்டும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக வேண்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது.
    • பின்னர் ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் புதுவை மாநில தலைவர் பதவியேற்பு விழா வில்லியனூர் திருக்காமீசுவரர் சிவன் கோவில் தென் கோபுர வீதியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மீண்டும் நரேந்திரமோடி பிரதமராக வேண்டி கோபூஜை நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார்.

    ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் சார்பில் மீண்டும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக வேண்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

    பின்னர் ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் என்ற அமைப்பின் புதுவை மாநில தலைவர் பதவியேற்பு விழா வில்லியனூர் திருக்காமீசுவரர் சிவன் கோவில் தென் கோபுர வீதியில் நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் கலந்து கொண்டு மாநில தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கராத்தே முருகனுக்கு சால்வை அணிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் தலைவர் முருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஷ்டிய சுரக்‌ஷா மகா மிஷன் பாரத் அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், தேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை பயன்பெற வேண்டும் என்பதற்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோ பூஜை நடைபெற்றது. மாற்று கட்சியினராக இருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த கோ பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பா.ஜனதா மட்டுமல்லாமல் இந்து மக்கள் அனைவரும், மாற்று மதத்தினராக இருந்தாலும் கூட அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார் அதன்படி இந்த பூஜை நடைபெற்றதாக தெரிவித்தார்.

    ×