search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganga Aarti"

    • புதுவை திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • தொடர்ந்து மாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது

    புதுச்சேரி:

    புதுவை திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    நாள்தோறும் ஒவ்வொறு ராசிக்குரிய நட்சத்திரங்களுக்கு யாகம் நடந்து வருகிறது.தொடர்ந்து மாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.

    நேற்றைய தினம் நடந்த கங்கா ஆரத்தியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். அவருடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் , ரமேஷ் எம்.எல்.ஏ, மற்றும் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர் விடுமுறையால் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இன்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நாளையுடன் புஷ்கரணி விழா நிறைவு பெறுகிறது.

    ×