search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flight operations hit"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடைந்ததால், ராய்ப்பூரில் விமான சேவை சிறிது பாதிக்கப்பட்டது.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர் விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, ராய்ப்பூர் விமான நிலையத்தில் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடந்தது.
    இதனால் விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து வருகிறோம். விரைவில் விமான சேவை தொடங்கும் என தெரிவித்தனர்.
    ×