என் மலர்
நீங்கள் தேடியது "financial institution assets"
- புதிய விதி அமலுக்கு வருகிறது
- மோசடி செய்யும் நிறுவனத்தின் சொத்துக்கள் பிணையாக பறிமுதல் செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் பலர் ஏலச்சீட்டுகள், தீபாவளி சீட்டுகள், நிதி நிறுவ னங்களை அரசின் அனுமதி யின்றி நடத்தி வருகின்றனர்.
இதில் ஏழை மக்கள் பலரும் பணம் செலுத்தி ஏமாந்து வருவது வாடிக்கை யாக உள்ளது. போலீசார் வழக்குப்பதிந்து மோசடி செய்தவர்களை கைது செய்தாலும் பொதுமக்கள் கட்டிய பணம் திரும்ப கிடைப்பதில்லை.
இந்நிலையில் மோசடி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் ஒழுங்கு படுத்தப்படாத வைப்பு நிதி சட்ட திருத்த மசோதா 2019 புதுவையில் அமல்படுத் தப்பட உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் வல்லவன் அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் ஒழுங்குப்படுத்தப்படாத வைப்புத் தொகை செலுத்து வது முழுமையாக தடை செய்யப்படும். வைப்புத் தொகை செலுத்தி யவர்களுக்கு பணத்தை திருப்பித்தரா விட்டால் கடும் தண்டனை கிடைக்கும்.
வைப்பு நிதியை பெற்றுத்தர அதிகாரம் பெற்ற அதிகாரி நியமிக்க ப்படுவார். மோசடி செய்யும் நிறுவனத்தின் சொத்துக்கள் பிணையாக பறிமுதல் செய்யப்படும்.
வைப்புத் தொகை செலுத்தி யவர்களின் தொகையை திருப்பித்தர நிறுவன உடைமைகள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வகுக்கப்பட உள்ளன.






