என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Donate milk"

    • தாய்மார்களால் சில காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதபோது தானமாக பெற்ற தாய்ப்பால் உதவுகிறது.
    • தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பிறகே குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் பச்சிளம் குழந்தைகள் நலத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவ மனை யில் அமுதம் தாய்ப்பால் வங்கி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. 7 ஆண்டாக பச்சிளம் குழந்தைகள் பலர் பயனடை ந்துள்ளனர். தாய்மார்களால் சில காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதபோது தானமாக பெற்ற தாய்ப்பால் உதவுகிறது.

    ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 400 மில்லி தாய்ப்பால் சேகரிக்க ப்பட்டது. இப்போது ஆயிரம் மில்லி வரை சேகரிக்க ப்படுகிறது. இதன்மூலம் தினமும் 20 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பிறகே குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    தாய்ப்பால் கொடுப்பதும், பெறுவதும் அவரவர் சொந்த விருப்பம். இதில் பண பரிமாற்றம் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×