என் மலர்
நீங்கள் தேடியது "dogs chasing"
- தெருநாய்களுக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர்.
- வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஏதேனும் நோய் ஏற்ப்பட்டால் அந்த நாய்களை தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை, மதகடிப்பட்டு , திருவண்டார் கோவில்,மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், சன்னியாசி குப்பம், நல்லூர், குச்சிப் பாளையம், சிலுக்காரி பாளையம் ஆண்டியார் பாளையம், கொத்தபுரி நத்தம், வம்புப் பட்டு, சோரப்பட்டு, விநாயகம் பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இந்த தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் நடந்து செல்லும் பொது மக்களையும் விரட்டி விரட்டி துரத்துகின்றன.
இந்த தெருநாய்களுக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். அதோடு குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தும் போது பயத்தில் கதறி அழும் காட்சி தினமும் நடந்து வருகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் தெரு நாய்களின் தொல்லையால் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
தெருநாய்களின் தொல்லை ஒரு புறம் இருக்க விட்டில் நாய் வளர்ப்ப வர்களும் நடைபயிற்சி என்ற பெயரில் தெருவில் நாய்களை அழைத்து செல்லும் போது தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு கொள்கி ன்றன. மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஏதேனும் நோய் ஏற்ப்பட்டால் அந்த நாய்களை தெருவில் கொண்டு வந்து விட்டு விடுகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நாய் பெருக்கம் அதிகரித்து விட்டது.
அதனை கட்டுப்படுத்த கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகமும் எந்த வித நடவடிக்கையும் எடுப்ப தில்லை. முன்பெல்லாம் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு கருத்தடை செய்து இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை மீண்டும் செயல்படுத்தினால் இது போன்று தெருநாய் பெரு க்கத்தை கட்டுப்படுத்தலாம் என பொதுமக்கள் தெரிவிக் கின்றன.






