என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctor abduction"

    • திருக்கனூர் அருகே பெண் டாக்டரை தனியார் கல்லூரி பஸ் டிரைவர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
    • இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் வானொலி வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சிவகாமி. இவர்களது இளைய மகள் கனிமொழி (வயது24). இவர் புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து கடந்த 8 மாதமாக தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தினமும் தான் பணிபுரியும் கல்லூரி பஸ்சிலேயே பணிக்கு சென்று வருவார். அப்போது அந்த கல்லூரி பஸ் டிரைவரான வாதானூரை சேர்ந்த செல்வம்(31) என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி செல்வத்திடம் கனிமொழி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சிவகாமி வீட்டில் சமையல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கனிமொழி திடீரென மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் கனிமொழி இல்லை.

    இதையடுத்து கனிமொழியின் தாய் சிவகாமி தனது மகள் மாயமானது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கல்லூரி பஸ் டிரைவர் செல்வம் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே கீழ்சாத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை. இவரது மனைவி தேவி. இவர்களது மகள் சுவித்ரா (வயது16). இவர் ஏம்பலத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே சுவித்ராவும் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த விழுப்புரம் அருகே அய்யனம்பாளைத்தை சேர்ந்த வேதகிரி(25) என்பவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனையறிந்த தேவி தனது மகளை பலமுறை கண்டித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கட்டிட வேலைக்கு சென்றார்.

    பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் சுவித்ரா இல்லாததை கண்டு தேவி அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது தேவியின செல்போனில் தொடர்பு கொண்டு வேதகிரியின் தாயார் பார்வதி பேசும் போது உனது மகள் சுவித்ரா எனது மகன் வேதகிரியுடன் வெளியூர் செல்வதாக தெரிவித்தார். அதன்பிறகு பார்வதி செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார்.

    இதையடுத்து தேவி மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கடத்தி சென்ற வேதகிரி மற்றும் அவரது தாய் பார்வதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×