என் மலர்
நீங்கள் தேடியது "died of corona"
- புதுவையில் ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 109, காரைக்காலில் 40, ஏனாமில் 6 பேர் என புதிதாக 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 811 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 109, காரைக்காலில் 40, ஏனாமில் 6 பேர் என புதிதாக 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 20, காரைக்காலில் 1, ஏனாமில் 3 பேர் என 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 949, காரைக்காலில் 190, ஏனாமில் 26, மாகியில் 3 பேர் என ஆயிரத்து 168 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை யில் 172, காரைக் காலில் 20, ஏனாமில் 4 பேர் என 196 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை இளங்கோ நகரை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 83 ஆயிரத்து 288 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.






