என் மலர்
நீங்கள் தேடியது "Deeni Jayakumar"
- புதுவை-தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
இதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் புதுவை-தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று காலை வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமையில் அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் திருக்காஞ்சி மகா புஷ்கரணி விழாவிற்கு செல்லும் சாலைகளை மேம்படுத்துதல், விழாவிற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல். பொதுமக்களின் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுதல், விழாவிற்கு வரும் பொது மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான இட வசதிகளை செய்து தருதல், சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறை களை மேம்படுத்தி பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரராஜ், உதவி பொறியாளர்கள் கோபி, மதிவாணன், இளநிலை பொறியாளர்கள் சங்கர், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






