என் மலர்
நீங்கள் தேடியது "Day celebrations"
- நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
- கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காலை 9.30 மணிக்கு கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து அலங்கார வாகனங்கள் ஊர்வலம், மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
குடியரசு தின விழா பாதுகாப்பு பணியில் 400 போலீசாரும், அணி வகுப்பில் 300 போலீசாரும் பங்கேற்கின்றனர்.
இன்று காலை இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. ஒத்திகையில் சித்தரிக்கப்பட்ட கவர்னர் முன்பு போலீசார், மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர்.
உள்துறை அமை ச்சகத்தின் எச்சரி க்கையை தொடர்ந்து புதுவை முழுவதும் உள்ள விடுதிகள், பஸ்நிலையம், வணிக வளாகம், ரெயில்நிலை யத்தில் போலீசார் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின்பேரில் தீவிர வாகன சோதனையும் நடக்கிறது.
- 75-வது சுதந்திர தின விழா சின்ன கோட்டக்குப்பம் 14 வது வார்டில் இன்று கொண்டாடபட்டது. 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.
- விழாவில் சிறப்பு விருந்தி னராக கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.
புதுச்சேரி:
75-வது சுதந்திர தின விழா சின்ன கோட்டக்குப்பம் 14 வது வார்டில் இன்று கொண்டாடபட்டது. 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தி னராக கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் 80 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா - பென்சில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில் 14-வது வார்டை சார்ந்த 36 மகளிருக்கும் தூய்மை பணியாளர்கள் 3 நபர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.
விழாவில் முஹம்மது முபாரக், சுகுமார் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவி தன்யாஸ்ரீ பாரதியார் வேடத்திலும், மாணவர் கிரண்பாலா மகாத்மா வேடமிட்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.
இந்த விழாவை ஆசிரியர் மஞ்சுளா ஒருங்கிணைப்பு செய்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகளை நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி வழங்கினார். அருகில் வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் மற்றும் பலர் உள்ளனர்.






