என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore-Puduwai"

    • கடலூர - புதுவை மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாலையில் ஏற்றுப்பட்டுள்ள பள்ளங்களை அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கணே–சன் தலைமையில் அரியாங்குப்பத்திலிருந்து முள்ளோடை வரை உள்ள கடலூர - புதுவை மெயின் ரோட்டில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பல இடங்களில் தன்னார்வலர்களின் உதவியோடு தடுப்பு கட்டைகளும், பேரிகார்டு, எச்சரிக்கை பலகைகள் வைத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சாலையில் ஏற்றுப்பட்டுள்ள பள்ளங்களை அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர்.

    போக்குவரத்து போலீசாரால் பல இடங்களில் இரு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் காட்டுக்குப்பத்திலிருந்து கன்னியகோவில் வரை உள்ள சாலையையும் இரு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருவழி சாலையாக மாற்ற பேரிகார்டு மற்றும் சிவப்பு வண்ணம் பூசிய பேரல்கள் வைத்து மாற்றியுள்ளனர்.

    இவை சுமார் 500மீட்டருக்கு வைக்கப்பட்டு உள்ளது. ேமலும் புதுநகர் பகுதியிலும் இருவழி சாலையாக மாற்ற அப்பகுதி மக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதுவை மாநிலத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் முக்கியசாலையாக கடலூர்- புதுவை தேசிய கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது.
    • இந்த சாலையில் நிமிடத்திற்கு 100 வண்டிகளுக்கும் மேலாக சென்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் முக்கியசாலையாக கடலூர்- புதுவை தேசிய கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது.

    இந்த சாலையில் நிமிடத்திற்கு 100 வண்டிகளுக்கும் மேலாக சென்று வருகிறது.

    எப்பொழுதும் இந்த சாலை பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் முறையாக சாலையை பராமரிக்காமலும், சாலை–யை போடாததால் அங்கும் இங்குமாக பள்ளம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பல கோடி செலவில் சீரமைப்பு பணி மட்டுமே நடந்தது.

    சில நாட்களிலேயே மீண்டும் சாலை பழுதானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

    இதனால் ஏற்கனவே ஏற்பட்ட சிறிய பள்ளங்கள் கூட இப்பொழுது பெரிய பள்ளங்களாக மாறி விட்டது‌. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக கன்னியகோ–யில் காட்டுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், தவ–ளக்குப்பம், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் பெரிய பெரிய பள்ளங்களாக இருந்து வருகிறது.

    இந்தப் பள்ளங்களால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் தவறி விழுந்து இதுவரை 3 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பலர் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    புதுவை அரசு பொதுப்பணித்துறை சாலை பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை முதல் கட்டமாக சரி செய்ய வேண்டும்‌. பிறகு நிரந்தர சாலையாக போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×