என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "corona virus in Puducherry"

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது. ஒரே நாளில் 91 பேருக்கு தொற்று பரவியுள்ளது. புதுவையில் 2 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 65, காரைக்காலில் 19, ஏனாமில் 7 பேர் என புதிதாக 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, ஏனாம் 2, மாகியில் ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 416, காரைக்காலில் 69, ஏனாமில் 45, மாகியில் 4 பேர் என 534 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 28, காரைக்காலில் 14, ஏனாமில் 8 பேர் என 50 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொ ரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    ×