என் மலர்
நீங்கள் தேடியது "Congress Satyagraha Protest"
- நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் இன்று விசாரணை நடத்தியது.
- அமலாக்கத்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி காங்கிரசார் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் இன்று விசாரணை நடத்தியது.
அமலாக்கத்துறை பொய்வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி காங்கிரசார் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சோனியாகாந்தியை விசாரணை செய்யும் நாளில், அதை கண்டித்து சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரசார் அறிவித்திருந்தனர்.
அதன்படி புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி சிலை அருகே சத்யாகிரக போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீலகங்காதரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் சங்கர், தனுசு, கருணாநிதி, ரகுமான், வீரமுத்து, இளையராஜா, விக்னேஷ், பஞ்சகாந்தி, மு.ப.சரவணன், சிவசாமி, மருதுபாண்டியன், திருமுருகன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






