என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Congress Member Arrest"
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ரஹீம் என்பவரின் மனைவி அம்பிரிதா போலீசில் புகார் செய்தார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுடைய மனைவிகளின் படங்களை அவதூறு ஏற்படும் வகையில் மார்பிங் செய்து வெளியிட்டது ஏன்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பரஸ்சலா பகுதியைச் சேர்ந்தவர் அபின். காங்கிரஸ் பிரமுகரான இவர், கட்சியில் உள்ளூர் வார்டு தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள தலைவர்களின் மனைவிகளுக்கு எதிராக அவதூறு பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அவர், கம்யூனிஸ்டு தலைவர்களின் மனைவிகளுடைய படங்களை மார்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ரஹீம் என்பவரின் மனைவி அம்பிரிதா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் புகார் கூறப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் அபின், போலி சுய விவரத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுடைய மனைவிகளின் படங்களை அவதூறு ஏற்படும் வகையில் மார்பிங் செய்து வெளியிட்டது ஏன்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்