என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child's parent"

    • புதுவை பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் கண்டக்டரிடம் இருந்து 2 பெண்கள் பணத்தை பறித்து சென்றனர்
    • புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் அந்த 2 பெண்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

    புதுச்சேரி:

    புதுவை பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் கண்டக்டரிடம் இருந்து 2 பெண்கள் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் அந்த 2 பெண்களை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது அந்த 2 பெண்களிடம் 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்தது.அந்த குழந்தை குறித்த விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் குழந்தை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாடகைக்கு வாங்கி வந்தது தெரியவந்தது.பின்னர் இந்த குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த குழந்தையின் உண்மை யான பெற்றோர்களை கண்டுபிடிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.அதன்படி இந்த தனிப்படை ஆந்திர விரைகிறது.

    ×