என் மலர்
நீங்கள் தேடியது "Certification in India"
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுவை ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம், மற்றும் சென்னை ஆறுபடை வீடு தொழில் நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு ஐ.எஸ்.ஓ. கல்வி சார்ந்த சர்வதேச தர மேலாண்மை மறு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தரக்கட்டுப் பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் டி.யூ.வி.,எஸ்.யூ.டி. அமைப்பானது கடந்த 2019-ம் ஆண்டு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் தரத்தை ஆராய்ந்து சர்வதேச தரநிலை மேலாண்மை சான்றிதழை வழங்கியது.
அப்போது தரச் சான்றிதழை பெற்ற முதல் கல்வி நிறுவனம் இதுவே ஆகும். அதனைத் தொடர்ந்து மறு சான்றிதழுக்கான ஆராய்வும் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இம்மறு சான்றிதழினை பெற்ற முதல் கல்வி நிறுவனம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையே. என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துறைகளின் டீன் மற்றும் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-
இந்தியாவிலேயே இச்சான்றிதழை பெற்ற முதல் நிறுவனம் அலைடு ஹெல்த் சயின்ஸ் என்றார். இதன்மூலம் சிறந்த கல்வியை வழங்குவதிலும், மாணவர்கள் நலனை மேம்படுத்துவதிலும் இத்துறைகள் சிறந்து விளங்குகிறது என்பது உறுதி செய்துள்ளது என டீன் தெரிவித்து உள்ளார்.
இத்தகைய தரச்சான்று பெறுவதற்கு சிறப்பாக செயலாற்றி வரும் துறையின் டீன் செந்தில்குமாருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் தங்களின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.






