என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bread milk"

    • புதுவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 100 மிலி பால், பிஸ்கெட் வழங்கப்பட்டு வந்தது
    • பின்னர் பாலில் ஊட்டச்சத்து பவுடர் கலந்து வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இத்திட்டம் 2 ஆண்டுக்கு பின் தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் 100 மிலி பால், பிஸ்கெட் வழங்கப்பட்டு வந்தது.

    பின்னர் பாலில் ஊட்டச்சத்து பவுடர் கலந்து வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இத்திட்டம் 2 ஆண்டுக்கு பின் தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 10-ந் தேதி முதல் மாணவர்களுக்கு மீண்டும் பால் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மதிய உணவு திட்டத்தின் துணை இயக்குனர் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    வருகிற 10-ந் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் 100 மில்லி டோன்ட் பால் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுவையின் அனைத்து நிறுவன தலைவர்களும் இதற்கான வழிமுறைகளை பின்பற்றி பால் வழங்க வேண்டும்.

    பாண்லே மூலம் வழங்கப்புடும் பால், சர்க்கரையின் தரம், அளவை உறுதி செய்ய வேண்டும். இதற்கான சிலிண்டரை சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சியில் இருந்து பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×