என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavendra Arts"

    • புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் வெ.பொ.இராமலிங்கம் கலந்து கொண்டு போட்டியினைத் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சி யகத்தில் நடந்தது.

    அறக்கட்டளைத் தலைவர் எழுத்தாளர் கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார். வி.கிருஷ்ணகுமார், மு.அருள்செல்வம், ஜெயந்தி ராஜவேலு, படைப்பாளி பைரவி, முன்னாள் ராணுவ வீரர் து.சசிக்குமார், செயலர் ஜெ.வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் "பாவேந்தர் வாழ்கிறார்" என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வெ.பொ.இராமலிங்கம் கலந்து கொண்டு போட்டியி னைத் தொடங்கி வைத்தார். கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் வி.கலிய பெருமாள் வாழ்த்திப் பேசினார்.

    தேர்வு பெற்ற 10 கவிஞர்களுக்கு மொத்தம் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பரிசினை அறக்கட்டளை சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.

    புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து வாழ்த்தி பேசினார்.முன்னதாகக் கவிஞர் ராஜேஷ் வரவேற்றுப் பேசினார். கவிஞர் பிரமீளா மேரி நன்றி கூறினார். கலைமாமணி செல்வ துரைநீஸ், கவிஞர் வெ. விசாலாட்சி, லட்சுமி தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
    • தொடர்ந்து நடந்த கவியரங்கத்தில் 42 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

     புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. கவிஞர் மு.ராஜேஷ் வரவேற்றார். புரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் எழுத்தாளர் கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    பாபு எழுதிய செங்கழுநீர் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினைப் பெற்றுக்கொண்ட கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினார். வேணுகோபால் செங்கழுநீர் நூல் குறித்து ஆய்வு செய்து பேசினார்.

    நூலாசிரியர் பாபு பேசினார். தொடர்ந்து நடந்த கவியரங்கத்தில் 42 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

    முடிவில் கவிஞர் மதன் நன்றி தெரிவித்தார்.

    ×