என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bee.Jayakumar"

    • சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி அரங்கு மைசூரில் நடக்கிறது.
    • மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்த 73 பேர் பயனடைகின்றனர்.

    புதுச்சேரி:

    சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த 2 நாள் பயிற்சி அரங்கு மைசூரில் நடக்கிறது.

    கூட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூகநலத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது.

    கருத்தரங்கில் புதுவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-

    மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுவையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்த 73 பேர் பயனடைகின்றனர். மாதந்தோறும் பயனாளிகள் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் 2022-23-ம் ஆண்டுக்கு ரூ.455.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயனாளிகள் இறந்து விட்டால் ஈமச்சடங்கு நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2 ஆயிரத்து 200 முதியோருக்கு ரூ.1.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    முதியோர் உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 100 முதியோர் சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு முன் உதவியாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் உதவுகிறது. முதியோர்க ளுக்கு ஆலோசனை, உதவிகளை வழங்க தேசிய உதவி எண் 14567 சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை பிரெஞ்சு தூதுக்குழுவினர் சந்தித்தனர்.
    • கலாச்சாரம், உணவு, சமூக அக்கறை, நீர்வள நிலவரம், தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்முறையை பிரெஞ்சு குழுவினர் அமைச்சரிடம் விளக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை பிரெஞ்சு தூதுக்குழுவினர் சந்தித்தனர்.

    கலாச்சாரம் மற்றும் பிராந்தியத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு மைய துணைத் தலைவர் டெல்பின் பெனாசி, உணவுக்கான பிராந்திய ஆலோசகர் எஸ்டெல் கோச்சார்ட், பிராந்திய தலைவரின் ஆலோசகர் சோலீன்பெனாய்ட், ஹெர்னாண்டஸ், ஒருங்கிணைப்பாளர் பாலின் சால்சிடோ, கூட்டாண்மை இயக்குனர் ஆலிவர் ரோலின் உட்பட 16 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

    கலாச்சாரம், உணவு, சமூக அக்கறை, நீர்வள நிலவரம், தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்முறையை பிரெஞ்சு குழுவினர் அமைச்சரிடம் விளக்கினர்.

    இயற்கை விவசாயத்தைப் பற்றி விரிவாக விவாதித்தனர். இயற்கை விவசாயம், ஆர்கானிக் விவசாயம் செய்யும் வழிமுறைகள் குறித்து அமைச்சர் பிரெஞ்சு குழுவிடம் கேட்டறிந்தார். பிரெஞ்சு குழுவுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்து தரும் என அமைச்சர் தேனீ.ெஜயக்குமார் உறுதியளித்தார்.

    • வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் வருகிற 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.
    • புஷ்கரணி விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 12 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் வருகிற 22-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை புதுவை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.

    புஷ்கரணி விழாவிற்கு வரும் பக்தர்கள் புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் திருக்காஞ்சி பகுதியில் படித்துறை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வந்து செல்வதற்காக கணுவாப்பேட்டை சாலை, ஒதியம்பட்டு புதிய மேம்பால சாலை, திருக்காஞசி மற்றும் உட்புற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    புஷ்கரணி விழா ஏற்பாடுகளுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 12 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டிகளுடன் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அப்போது நடைபெற்ற இடம் பணிகள் குறித்தும் யார் யாருக்கு என்னென்ன பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் சிரமமின்றி வந்து செல்ல சாலை மேம்பாட்டு வசதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இதனை தொடர்ந்து விழா நடைபெற இருக்கும் சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறைக்கு சென்ற ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பாதுகாப்பாக ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும் ஆற்றில் இறங்க முடியாதவர்கள் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஷவர் மூலம் குளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    கோவில் சிவாச்சாரியார் சரவணன் நிருபர்களிடம் கூறும்போது,

    புஷ்கரணி விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சங்கராபரணி ஆற்றில் நீராடினால் முன்னோர்கள் தோஷம் தீரும் திருமண தோஷம் புத்திர பாக்கியம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்றார்.

    ×