என் மலர்
நீங்கள் தேடியது "Anpahagan Thaku"
- மத்தியிலும் மாநிலத்தி லும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் 18 ஆண்டு காலமாக மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் ஏன் தாங்கள் ஆட்சியில் இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்கவில்லை.
- மாநில அந்தஸ்துக்காக ஆளும் அரசு வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் இல்லை.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மத்தியிலும் மாநிலத்தி லும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரசும் 18 ஆண்டு காலமாக மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க.வும் ஏன் தாங்கள் ஆட்சியில் இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்கவில்லை.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அந்த அரசை எதிர்த்து மாநில அந்தஸ்துக்காக எத்தனை முறை நாராயணசாமி வீதியில் இறங்கி போராடியுள்ளார்?
10 ஆண்டுகாலம் இந்த நாட்டின் பிரதமரோடு இணக்கமாக இணை அமைச்சர் பதவியில் இருந்த நாராயணசாமி எத்தனை முறை புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என பிரதமரை கேட்டிருப்பார்? தான் மட்டும் அதிகாரத்தில் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தையே வழங்காமல் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்தியவர் தான் நாராயணசாமி.
மாநில அந்தஸ்துக்காக ஆளும் அரசு வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியம் இல்லை.
பிரதமரை டெல்லியிலேயோ அல்லது புதுவையிலேயோ சந்திக்கும் போது மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தினாலே போதுமானது. .
புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். இது சம்பந்தமாக புதுவை அரசும் முதல்-அமைச்சர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைக்கும் அ.தி.மு.க. என்றும் துணைநிற்கும்.
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.






