என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annai Vidya Mandir"

    • அன்னை வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • மாநில சுயநிதி தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ரங்கநாதன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தனசெல்வம் தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தனசெல்வம் பள்ளி மாணவர்களின் படைப்புகளை விளக்கி பேசினார்.

    அறிவியல் கண்காட்சியை புதுவை மாநில சுயநிதி தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ரங்கநாதன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    சங்கத்தின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், இளமதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கண்காட்சியை திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு பயன்பெற்றனர். கண்காட்சி க்கான ஏற்பாடுகளை பள்ளியின் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×