என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anemia awareness"

    • கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ரத்த சோகை வாகன விழிப்புணர்வு தொடக்க விழா கோட்டகுப்பம் நகராட்சி வளாகத்தில் நடந்தது.
    • வட்டார திட்ட உதவியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ரத்த சோகை வாகன விழிப்புணர்வு தொடக்க விழா கோட்டகுப்பம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. வாகன பேரணியை நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    பேரணி ஈ.சி.ஆர் சாலை, மகாத்மா காந்தி சாலை, பழைய பட்டினம் பாதை, சின்ன கோட்டகுப்பம், சின்ன முதலியார் சாவடி, பெரிய முதலிச்சாவடி, தந்திராயன் குப்பம், நடுக்குப்பம், சோதனைக்குப்பம், பெரிய முதலாச்சாவடி வரை சென்று பேரணி அடைந்தது. பேரணியில் நகர மன்ற துணைத் தலைவர் ஜீனத்பீவி முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர் உசேன், ஸ்டாலின் சுகுமார், சண்முகம், ஆதிலட்சுமி பாஸ்கர், கோட்டகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி தேசப்பன், வட்டார வளர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாஜிதா பேகம், மேற்பார்வையாளர் செல்வி, பூங்கோதை, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், வட்டார திட்ட உதவியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×