search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allied Health Sciences"

    • கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
    • டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு கோடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்களின் கொடி அணிவிப்பு நடந்தது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷகல்ல  ன் ரிசர்ச் பவுண்டேஷன் நிகர் நிலை பல்கலைக்கழ கத்தின கீழ் செயல்படும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் விளையாட்டு திருவிழா தொடக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு விநாயக மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளின் டீன் . பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி ஜோதி விளக்கு ஏற்றி வைத்து சுழற்கோப்பையை அறிமுகம் செய்து வைத்து தலைமை உரையாற்றினார். இயக்குனர் பொறுப்பு ஆண்ட்ரூ ஜான் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் சாம்பியன் பாஸ்கரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் ராகேஷ் சேகல் , முன்னாள் டீன்.டாக்டர் கொட்டூர், கல்வி ஆராய்ச்சி யின் டீன் மகாலட்சுமி மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் குராக் குருவில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு இருந்தனர் விருந்தினர்களை டீன். டாக்டர் செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். பிறகு கோடி ஏற்றுதல், ஜோதி ஓட்டம், மாணவர்க ளின் கொடி அணிவிப்பு நடந்தது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, விஷ்ணு வர்தன், நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஐயம்மா, டாக்டர் சவீதாபேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • உயர்கல்வி நிறுவனங்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டு டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ் தரவரிசை வழங்கி வருகிறது.
    • சமூக சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவின் நிலையான நிறுவனங்களின் பசுமை தரவரிசை 2023 அங்கீகாரமானது ஆர்-உலக நிறுவன தரவரிசை அமைப்பின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களின் நிலைத்தன்மையை மதிப்பீட்டு டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ் தரவரிசை வழங்கி வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டிற்கு விநாயக மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுவை ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலை டு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு 'டயமண்ட் பேண்ட் ஏ பிளஸ்' தரவரிசை சான்று வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்,''எங்கள் கல்லூரியின் நிலையான பல்வேறு முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளோம். கல்லூரியின் கட்டமைப்பு, பல்வேறு ஆற்றல் மேலாண்மையை நடை முறைபடுத்துதல், மறுசுழற்சி மேலாண்மை , சமூக சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது வெறும் கல்வி சார்ந்தது மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் சமூக பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்பாடுகளையும் மாணவர்களுக்கு அளிக்கிறது என்றார்.

    இவ்விருது பெறுவதற்கு உறுதணையாக செயலாற்றிய துறையின் டீனுக்கு பல்கலைகக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். தரவரிசை சான்றை துறையின் டீன், பல்கலைக்கழக வேந்தரிடம் கொடுத்து வாழ்த்துகளை பெற்றார்.

    • புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கல்லூரியின் ஆராய்ச்சி சபை மாணவர் அமைப்பும் இணைந்து தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் ஆலோசனையின் படி, இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர் சுகந்தி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் கார்த்திகேயன் பங்கேற்று மாணவர்களுக்கு மருத்துவ துறையில் அறிவியலின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியின் துணை தலைவர் பேராசிரியர் சசி கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில்150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 50 விளக்க மாதிரிகளை சமர்பித்து விளக்கம் அளித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    முடிவில் உதவி பேராசிரியரும் கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் துணை தலைவருமான கிருஷ்ணக்குமார் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் தலைவர் சுகந்தி, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணக்குமார், ஆராய்ச்சி சபையின் உறுப்பினர்கள் தீபிகா, கோவரத்ன விஷ்ணு, கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள், அனிதா, வளர்மதி, வெண்ணிலா மற்றும் விரிவுரையாளர் மிராக்ளின் ஷேரண், ஜெயசூரியா, தமிழ் செல்வன், என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் நுண்கலை மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×